பூனாகலை, கபரகலை பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீடமைப்புத் திட்டத்தின் 50 வீடுகள் ஓகஸ்ட் 28 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
பூனாகலை, கபரகலை பிரதேசங்களைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக 10 பேர்ச்சஸ் காணியில் தலா 550 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடொன்றிற்காக சுமார் 32 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றைக் கொண்ட இந்த வீடுகளின் ஊடாக, அக்குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய வீடுகளில் குடியேறும் குடும்பங்களுக்கு தேவையான தளபாடங்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சுமார் 175,000 ரூபா பெறுமதியில் வழங்கும் நிகழ்வு நேற்று (25) நடைபெற்றது. இந்த வேலைத்திட்டம் தோட்டத்தொழில் மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் மற்றும் ரவீந்திர பண்டார, தோட்டத்தொழில் மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கலஹம, நலன்புரி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.







