நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 95 பேர் உயிரிழந்துள்ளதுடன், 403 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் 61 நேபாளப் பிரஜைகளும், 341 வெளிநாட்டுப் பிரஜைகளும் அடங்குகின்றனர்.
அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 133 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 47 பேரும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








