வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால், ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தினால் குறித்த ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுஹெர ரயில் நிலையம் வழியாக பயணிக்கும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தி, ரயில் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








