கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலிம் வீதி நோவா மைதானத்தை அமைந்த தனியார் காணிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ள. வீடொன்றை நிர்மாணிப்பதற்கு அத்திவாரப் பணிகளை ஆரம்பித்த போது அங்கு கைக்குண்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் சட்ட நடவடிக்கைகளுக்கென நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். கிண்ணியா பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







