Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

17 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளாகக் குறிப்பிடப்படும் முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலைகளில் இருந்து இணையவழி காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு கல்லடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், காத்தான்குடியில் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு இடம்பெற்று வருகிறது.

குறித்த கொலைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, வழக்கு விசாரணையின்போது லண்டனில் இருப்பதாகக் கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபருக்கு எதிராக தொடர்ந்தும் பிடியாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!
செய்திகள்

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!

September 1, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியீடு!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்குள் வெளியீடு!

September 1, 2026
பலாங்கொடையில் காணாமல் போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு!
செய்திகள்

பலாங்கொடையில் காணாமல் போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு!

September 1, 2026
பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நாளை போராட்டம்; FUTA அறிவிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நாளை போராட்டம்; FUTA அறிவிப்பு!

September 1, 2026
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை!

September 1, 2026
யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது!
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி மீண்டும் கைது!

September 1, 2026
Next Post
ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் பாறைகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.