5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களைத் தண்டித்தல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் சிறுவர்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரசாரங்களை மேற்கொள்வதையும் தவிர்க்கவும்.
மேற்கூறியவாறு செயற்படுவது சிறுவர் துன்புறுத்தல் (துஷ்பிரயோகம்) சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், அவ்வாறு செய்வோருக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகளில் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது!








