Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

15 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்காக பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாணவர்களின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோரும் ஆசிரியர்களும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனரா என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விரைவுப் பரிசோதனை கருவிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான முன்மொழிவு ஜனாதிபதி தலைமையிலான தேசிய குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பரிசோதனை கருவிகளை முதற்கட்டமாக சந்தைகளில் கிடைக்கச் செய்து, பின்னர் உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்கள் ஊடாக நாடு முழுவதும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெற்றோர் மருத்துவ நிலையத்திற்குச் செல்லாமல், தங்களது பிள்ளைகளுக்கு தனிப்பட்ட முறையில் போதைப்பொருள் பரிசோதனையை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை
செய்திகள்

வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை

September 4, 2026
திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை
செய்திகள்

திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை

September 4, 2026
பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!
செய்திகள்

பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!

September 4, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்

September 4, 2026
நாட்டில் வறட்சியால் 96,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் வறட்சியால் 96,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

September 4, 2026
செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

September 4, 2026
Next Post
வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை

வியட்நாமில் பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கு; 11 பேருக்கு மரண தண்டனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.