வியட்நாமில் இடம்பெற்ற பாரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நான்கு விமானப் பணிப்பெண்கள் பற்பசைக் குழாய்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மொத்தம் 227 பேர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்ட 11 பேருக்கு ஹோ சி மின் நகர மக்கள் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக வியட்நாம் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியட்நாமில் இடம்பெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த வழக்கில், மேலும் பல பிரதிவாதிகளுக்கு வெவ்வேறு கால அளவிலான சிறைத்தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







