Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை

திருகோணமலையில் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் கவலை

21 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், கிளிவெட்டி, வெருகல், மூதூர், சேருவில மற்றும் சம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், கடந்த போகத்தை விட இம்முறை அறுவடை செய்யப்படும் நெல் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்படுவதால் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கல்லாறு மற்றும் கிளிவெட்டி பகுதிகளில் இரண்டு நெல் களஞ்சியசாலைகள் காணப்படுகின்ற போதிலும், அங்கும் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அறுவடை செய்த நெல்லை தனியார் வர்த்தகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

வேளாண்மைச் செய்கைக்கான செலவுகள் முன்னைய காலங்களை விட அதிகரித்துள்ள நிலையில், அதிக செலவு செய்து பயிர்ச்செய்கை மேற்கொண்ட போதிலும், கடந்த போகத்தை விட இம்முறை குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு, நெல்லுக்கான நியாயமான விலையை உறுதி செய்வதுடன், அரசாங்க நெல் களஞ்சியசாலைகள் ஊடாக உடனடியாக நெல் கொள்வனவை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!
செய்திகள்

பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பில் விசேட பரிசோதனை!

September 4, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைகளை விட்டு 2 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இடைவிலகல்

September 4, 2026
நாட்டில் வறட்சியால் 96,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் வறட்சியால் 96,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

September 4, 2026
செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

September 4, 2026
கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!
செய்திகள்

கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!

September 4, 2026
நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

September 4, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.