வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (9) பக்தர்களின் பெரும் பங்கேற்புடன் நடைபெற்ற நிலையில், பெண் ஒருவரின் தாலிக்கொடி பறிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
தேர்த் திருவிழாவை காண வந்த குறித்த பெண்ணின் தாலிக்கொடி பறிக்கப்பட்டதையடுத்து, அவர் ஆலய வளாகத்தில் கண்ணீருடன் கதறி அழுத நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இதேவேளை, மேலும் சில பக்தர்கள் தங்களது பெறுமதியான நகைகள் மற்றும் அணிகலன்களை இழந்துள்ளதாகவும், சிலர் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, நகை மற்றும் பெறுமதியான பொருட்களை அணிந்து வரும் பக்தர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








