மின் மற்றும் மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும்போது, நுகர்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாத கால உத்தரவாதமும் (Warranty), அதற்கான எழுத்துபூர்வ உத்தரவாதச் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
ஒரு பொருளை கொள்வனவு செய்யும் போது, அதற்கு உத்தரவாதம் இருப்பதாக வாய்மொழியாகத் தெரிவிப்பது மாத்திரம் போதுமானதல்ல என அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
நுகர்வோரின் புகார்களின் அடிப்படையில், மின் மற்றும் மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் நிலையங்கள் தொடர்பில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் தாம் கொள்வனவு செய்யும் மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு உரிய உத்தரவாதச் சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறும் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.







