Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிஜிட்டல் கடவுச்சீட்டினை அறிமுகம் செய்துள்ள நாடு!

டிஜிட்டல் கடவுச்சீட்டினை அறிமுகம் செய்துள்ள நாடு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

ஸ்மார்ட் போன்களின் செயலி மூலம் செயற்படக்கூடிய டிஜிட்டல் கடவுச்சீட்டினை முதன் முதலாக பின்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கடல் கடந்த பயணங்களை நவீனமயமாக்குதலையும், பாதுகாப்பினையும் அடிப்படையாக கொண்டே இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டு திட்டம் முன் மொழியப்பட்டுள்ளது.

அதன்படி டிஜிட்டல் கடவுச்சீட்டினை அறிமுகப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் திட்டமிட்டிருந்த பின்லாந்து அரசு அதற்காக குழு ஒன்றினையும் அறிமுகப்படுத்தி திட்டத்தினை செயற்படுத்தியிருந்தது.

அதன்படி, ஃபின்ஏர் (Finnair), ஃபின்னிஸ் காவல்துறை (Finnish police) ,ஃபின்ஏவியா (Finavia) மற்றும் விமான நிலைய செயற்பாட்டாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்றினை சென்ற மாதம் 28 ஆம் திகதி பின்லாந்து அறிமுகப்படுத்தியிருந்தது.

இவர்களின் முயற்சியின் கீழ் தற்போது உலகில் முதன் முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டு பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்த, டிஜிட்டல் கடவுச்சீட்டினை பயன்படுத்தும் முறைமை தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகளுக்கிடையில் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ஹெல்சின்கியில் இருந்து இங்கிலாந்து செல்லும் சில ஃபின்ஏர் விமான பயணிகளிடம் மாத்திரமே முதல் கட்டமாக இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டினை பயன்படுத்தும் முறையினையும் இந்த குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஃபின் டிசிசி பைலட் (FIN DTC Pilot app) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயணிகள் தங்கள் முக அங்கீகாரம் மற்றும் சுயவிவர தரவுகள் என்பன குறித்த செயலியில் சரியாக பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

பின்னர், ஃபின்னிஸ் எல்லை காவலருக்கு செயலி மூலம் இந்த தகவல்களை அவர்கள் அனுப்ப வேண்டும்.

டிஜிட்டல் கடவுச்சீட்டு என்பது தொலைபேசி செயலியை அடிப்படையாக கொண்டது என்பதால், பயணிகள் தங்கள் கடவுச்சீட்டு தகவல்களை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள இந்த முறை உதவுகிறது.

இதனால் தனியாக கடவுச்சீட்டு புத்தகங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை அவசியமற்றதாக்கப்படுகிறது.

எளிது, வேகம், பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்ட இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டு திட்டமானது உத்தியோகபூர்வமாக எதிர்வரும் ஆண்டு (2024) பெப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், இத்திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் பின்லாந்து தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

June 9, 2025
பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
செய்திகள்

பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

June 9, 2025
பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்
செய்திகள்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

June 9, 2025
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு
செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

June 9, 2025
323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்
செய்திகள்

323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்

June 9, 2025
கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

June 9, 2025
Next Post
அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை!

அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.