Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச உடன்படிக்கை குறித்து ஊடகங்களே முடிவெடுங்கள்; ஜனாதிபதி தெரிவிப்பு!

சர்வதேச உடன்படிக்கை குறித்து ஊடகங்களே முடிவெடுங்கள்; ஜனாதிபதி தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

சர்வதேச உடன்படிக்கையில் ஈடுபடுவதா, இல்லை என்றால் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான ‘திவயின’ பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியரும் ஆசிரியர் பணிப்பாளருமான எட்மண்ட் ரணசிங்க சுரின் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வில் நேற்று(03) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின்படி நாட்டின் ஊடகத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தனது வாழ்க்கைப் பயணத்தில் தற்போது 93 வயதாகும் ரணசிங்க அவர்களின் ஏழு தசாப்த கால ஊடகப் பணியைப் பாராட்டி தொகுக்கப்பட்ட ‘எட்மண்டின் செய்தித்தாள் புரட்சி’ புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்நூலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் டபிள்யூ. எம். கே. விஜேபண்டார, பிரதி ஊடகப் பணிப்பாளர் தீப்தி அதிகாரி ஆகியோரால் தொகுக்கப்பட்டது.

மூத்த ஊடகவியலாளர் எட்மன் ரணசிங்கவை இந்நாட்டில் ஊடகவியலில் மாற்றத்தை ஏற்படுத்திய விமானி என அழைக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏழு தசாப்த கால ஊடகப் பணியில் ஈடுபட்ட எட்மன் ரணசிங்கவின் ஊடகக் கலை இலங்கையின் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு நாட்டிலும் ஊடகங்கள் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டே செயற்படுகின்றன, ஆனால் சமூக ஊடகங்கள் தோன்றியதன் பின்னர் அவர்கள் விரும்பியதை தமது விருப்பத்திற்கேற்ப வெளியிடுவதற்கு செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், ஊடகக் கலையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பங்களிக்கும் என்பதை ஆராய்வதன் மூலம் பயனுள்ள ஊடகக் கலையை உருவாக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடையசெய்திகள்

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு
செய்திகள்

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

June 9, 2025
கிழக்கை காப்பற்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்புடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று இணையவேண்டும்; கருணா அம்மான் தெரிவிப்பு
செய்திகள்

கிழக்கை காப்பற்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்புடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று இணையவேண்டும்; கருணா அம்மான் தெரிவிப்பு

June 9, 2025
பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்
செய்திகள்

பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்

June 9, 2025
பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து
செய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

June 9, 2025
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்
செய்திகள்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

June 9, 2025
700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது
செய்திகள்

700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது

June 9, 2025
Next Post
களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகள் பிரதேச சபைக்கு முன்னால் போராட்டம்!

களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி சாரதிகள் பிரதேச சபைக்கு முன்னால் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.