Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தல் முறையில் மாற்றம்; வாக்குச்சீட்டுகளுக்கு பதிலாக இயந்திரங்களை பயன்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை!

தேர்தல் முறையில் மாற்றம்; வாக்குச்சீட்டுகளுக்கு பதிலாக இயந்திரங்களை பயன்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் ஆலோசனை முன்வைப்பதற்காக 09
பேர் அடங்கிய ஆணைக்குழு வொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.அக்குழுவின் தலைவராக முன்னாள் நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியசாத் ஜெரார்ட்டெப் நியமிக்கப்பட்டுள்ளார

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.பீ.ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.குழுவின் உறுப்பினர்களாக சுந்தரம் அருமைநாயகம், சேனா நாயக்க அலி சென்ரி லாகே, ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ஜயந்த அபேசேகர,அஹமட் ரஜித நவீன் கிரிஸ்டோபர், லெப்பே மொஹொமட் சலீம், சாகரிகா தெல்கொட, எஸ்தர் சிறியாணி நிமல்கா பெர்னாண்டோ மற்றும் விதாரணகே தீபானி சமந்த ரொட்ரிகோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,இந்த வர்த்தமானியினூடாக பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிக ரத்தல், தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதி முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் திகதி வரையான காலத்தை குறைத்தல், வாக்கெடுப்பின்போது அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகளுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலத்திரனியல் வாக்குகளை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குதல், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிக்கக் கூடிய வாய்ப்பு, நபரொருவர் இரண்டு வேட்பாளர் களை தெரிவு செய்வதற்கும் அவ்வாறு தெரிவு செய்யும் பட்சத்தில் ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட இரு சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வாய்ப்பை வழங்குதல், அரசியல் கட்சிகள் ஊடகங்களை
பயன்படுத்தும் முறை தொடர்பில் ஊடக விதிமுறைகளை உருவாக்குதல், தேர்தலில் போட் டியிடுபவர்கள் செயற்படும் விதம், அரசியல் கட்சிகளை பதிவு செய்தல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்கள் தொடர்பான சட்ட திட்டங்களை பலப்படுத்துதல் ஆகிய பிரதான விடயங்கள் குறித்து இந்த குழு ஆலோசனை முன்வைக்கும்.

தொடர்புடையசெய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
Next Post
ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவுநாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவுநாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.