Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றதா? ; அரச ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் ஜீவராஜா ருபேசன் கேள்வி!

கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றதா? ; அரச ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் ஜீவராஜா ருபேசன் கேள்வி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது என இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் ஜீவராஜா ருபேசன் தெரிவித்தார்.
உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் ஆசிரியர்கள்,ஆசிரிய நியமனங்களை இழுத்தடிப்பு செய்யும் செயற்பாடுகள் பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் தங்களுடைய உரிமைப் போராட்டத்தினை முன்னெடுத்து இருக்கிறார்கள் அந்த வகையில் தான் கடந்த 24 ஆம் தேதி எங்களுடைய இசுருபாயவுக்கும் முன்பாக ஒரு உரிமை போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள் இதில் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த பொழுது எங்களுடைய ரணில் ராஜபக்ஷவினுடைய அரசாங்கமானது மிகவும் ஒரு சுதந்திரமான முறையிலே அவர்களுக்கு இருக்கின்ற உரிமைகளை பயன்படுத்தி ஒன்று கூடி தங்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை முன் வைப்பதற்காக கல்வி அமைச்சினை நோக்கி சென்ற ஆசிரியர்கள் மீது ரபர் குண்டுகளை பாவித்தும் அதே போன்று நீர் தாரை பிரியோகம், கண்ணீர்ப்புகை பிரயோகம் போன்றவற்றை பயன்படுத்தி மிலேசத்தனமாக அவர்களை அடக்குகின்ற செயற்பாடுகளை கடந்த 24 ஆம் தேதி மேற்கொண்டிருந்தார்கள்.

இதன் பொழுது பல ஆசிரியர்கள் சுகயீனமுற்று வைத்தியசாலையிலே அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் அன்று இடம்பெற்று இருக்கிறது. இது இவர்களுக்கு 25 வருட காலமாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற சம்பள நிலுவை பிரச்சினைக்காகவும் அதேபோன்று இன்றைய காலகட்டத்திலே வயது மாற்றத்தின் அடிப்படையில் விரைவாக ஆசிரியர்களுக்கான அல்லது அரச ஊழியர்களுக்கான ஓய்வு அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலே பல ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்திலே ஓய்வுக்கு சென்றிருந்தார்கள் இதனால் பாடசாலைகளில் பல ஆசிரியர்களுடைய குறைபாடுகள் காணப்படுகின்றது.

முக்கியமான பல பாடங்களுக்கான ஆசிரியர்களுடைய பற்றாக்குறை காணப்படுகின்றது. இதன் போது அந்த இடங்களுக்கு உடனடியாக ஆசிரியர் நியமனத்தினை வழங்குவதற்கான கோரிக்கையை முன் வைத்திருந்தார்கள். இவர்கள் கல்வி அமைச்சினாலே பரீட்சைகளை நடத்தப் போகின்றோம் ஆசிரியர்களை நியமிக்க போகின்றோம் என்று பல வருடங்களாக இற்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்த கதையினை கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று வரைக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதற்கான எந்த ஒரு செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படவுமில்லை நியமிக்கப்படவும் இல்லை.
தொடர்ச்சியாக இவர்கள் கல்வி புலத்தை ஏமாற்றுகின்ற செயல்பாடுகளையே செய்து கொண்டிருக்கின்றார்கள். அது மாத்திரம் இன்றி இன்றைய காலகட்டத்தில் அண்மையில் நடந்த தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையினை எடுத்துக் கொண்டால் பகுதி ஒன்று பரீட்சை தாளானது மிகவும் அந்த மாணவர்களுடைய வயது எல்லைக்கு அப்பால் சென்று அவர்களை அழுத்தங்களுக்கு உட்படுத்தி அந்த பரீட்சைக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையிலே மிகவும் கடினமான முறையிலே அந்த பரீட்சை வினாத்தாள்கள் எடுக்கப்பட்டிருந்தது.எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களை வைத்து பார்க்கும் போது கல்வியினை இவர்கள் தனியார் மயப்படுத்தப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு இட்டு செல்வதற்கான ஒரு சந்தேகத்தினை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.

உரிமைக்காக குரல் கொடுக்கின்ற ஆசிரியர்கள் தாக்கப்படுகிறார்கள் அதே போன்று புலமை பரீட்சையிலே இவ்வாறான செயற்பாடுகளை செய்கின்றார்கள் அதேபோன்று ஆசிரியர்களின் நியமனத்தை இழுத்தடிப்பு செய்கின்றார்கள் இவற்றினை பார்க்கும்போது இன்று ரணில் ராஜபக்சவும் அந்த ரணில் ராஜபக்சவினுடைய அரசாங்கத்தில் சுய லாபத்துக்காக சேர்ந்து கொண்டிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஒன்றிணைந்து இவ்வாறான செயற்பாடுகளை செய்து கொண்டு கல்வி எங்கு இழுத்துச் செல்கின்றார்கள் என்கின்ற பாரிய சந்தேகத்தினை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.

இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்வார்களே ஆனால் கடந்த காலத்திலேயே 2021 ஆம் ஆண்டு நடந்ததை போன்று பாரிய போராட்டத்தை முன்னெடுத்து தொடர்ச்சியாக நாங்கள் எங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தினை முன்னெடுத்து கொண்டு செல்வோம் அதற்கு முதல் அதிமாக இன்று ஒன்று முப்பது மணி அளவில் நாடளாவிய ரீதியில் எங்களுடைய ஆசிரியர்கள் தாக்கப்பட்டதற்கும் மிலேட்சத்தனமான கல்வி அமைச்சுக்கு முன்பாக அரசாங்கத்துக்கு சார்பான போலீசார் மற்றும் படையினர் செயற்பட்டதற்கு எதிராகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒவ்வொரு பாடசாலைக்கு முன்பாகவும் நாடளாவிய ரீதியில் இன்று ஏற்பாடு செய்திருக்கின்றோம் இந்த போராட்டம் ஆரம்பமே தொடர்ச்சியாக ஆசிரியர்களுடைய உரிமை குரல் அடக்கப்படுமாக இருந்தால் நாங்கள் இந்த போராட்டத்தினை முன் கொண்டு சென்று சென்ற முறை போன்று இறுதிவரை போராடி வெற்றி வரை இந்த போராட்டத்தை கொண்டு செல்வோம்.

கல்வி அமைச்சர் அன்றைய நாள் மாநாட்டில் பங்கு பெறுவதற்காக வெளிநாடு சென்றிருக்கின்றார் அந்த நேரத்தில் அவர் இல்லாததன் சந்தர்ப்பத்திலே இவ்வாறான ஒரு செயற்பாடு நடைபெற்றதாக அவர் மன்னிப்பு கோரி இருக்கின்றார் இருந்தபோதிலும் அவர் இருக்கின்ற அரசாங்கத்தினால் ஏவப்பட்ட அல்லது அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட படையினர் மற்றும் பொலிசார் மூலமாக தான் தாக்குதல் நடைபெற்றிருந்தது.

கல்வி அமைச்சர் வெறுமனே அங்கு சென்றதனால் இது நடைபெற்றது இதற்கு நான் மன்னிப்பு கோருகின்றேன் என்கின்ற விடயத்தை கூறினாலும் கல்வி அமைச்சினோடு சம்பந்தமாக தொடர்ச்சியாக நாங்கள் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டோம் எனவே ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது ஒரு தொழிற்சங்க பிரதிநிதிகள் சென்று கலந்துரையாடலினை மேற்கொள்கின்ற சந்தர்ப்பத்தில் அதற்குரிய தீர்வுகளை முன்வைத்து பெற்றுக் கொடுப்பதற்கு முனைவார்கள் இவர்கள் தீர்வுகளை தருகின்றோம் தருகின்றோம் என்று கூறிக்கொண்டு ஏமாற்றுகின்ற செயல்பாடுகளிலே தொடர்ச்சியாக செய்கின்றார்கள் எனவே இந்த இவருடைய அறிக்கையை இவ்வாறான செய்யப்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம். நாங்கள் உண்மையாக இலங்கை என்ற நாட்டிலே எங்களுடைய ஆசிரியர் தொழிற்சங்கங்களை எடுத்துக் கொண்டால் அனைத்து மொழி இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு தொழிற்சங்கம் ஆசிரியர்கள் இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான பல வேலை திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்த அடிப்படையிலேயே மட்டக்களப்பிலே அண்மையிலே ஏற்படுத்தப்பட்ட மத குரு அவர்களுடைய பேச்சா ஆனது ஒரு இனத்தினை அடக்கி அச்சுறுத்தல் விடுக்கின்ற செயற்பாடாகவே காணப்படுகின்றது.

இந்த செயற்பாடு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது மட்டக்களப்பில் எனவே இதற்கு எதிராக இந்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற விடயத்தில் நாங்கள் குறிப்பாக இருக்கின்றோம்.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
வவுனியாவிலும் தீப்பந்த போராட்டம்!

வவுனியாவிலும் தீப்பந்த போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.