Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணிலை தொடர்பு கொண்ட இந்திய மத்திய நிதி அமைச்சர்; உடனடியாக 22 பேர் விடுதலை!

ரணிலை தொடர்பு கொண்ட இந்திய மத்திய நிதி அமைச்சர்; உடனடியாக 22 பேர் விடுதலை!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலையீட்டின் பேரில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 இந்திய கடற்றொழிலாளர்கள், உடனடியாக நேற்று நள்ளிரவே அவர்களின் படகுகளுடன் விடுவிக்கப்பட்டு தமிழகத்துக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை கடற்பரப்பில் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து, கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்துக்காக நேற்று மதியம் 22 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று மாலை 5 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அவர்கள், அவர்களின் படகுகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட செய்தி இராமேஸ்வரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இதேநேரம் இராமேஸ்வரத்துக்கு இரு நாள் பயணமாக இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்ற நிலையில், கடற்றொழிலாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் நிதி அமைச்சரை நேரில் சந்தித்து கைதான தமது உறவுகளை அவர்களின் படகுகளுடன் உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடற்றொழிலாளர்களின் கோரிக்கையின் பேரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தொடர்பு கொண்ட இந்திய நிதி அமைச்சர், கடற்றொழிலாளர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

அதனையடுத்து 22 கடற்றொழிலாளர்களையும் கையோடு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களது படகுகளில் அவர்களை ஏற்றி அவர்களை இலங்கையின் கடல் எல்லை வரை இலங்கைக் கடற்படையினர் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கிருந்து இன்று அதிகாலை தமிழகத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!
செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!

June 8, 2026
மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்
செய்திகள்

மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்

June 8, 2026
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!

June 8, 2026
மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்
செய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்

June 8, 2026
பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!
செய்திகள்

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

June 8, 2026
Next Post
தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது குஷ்புவின் யாழ் விஜயம்!

தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது குஷ்புவின் யாழ் விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.