Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடல் வழியாக புலம்பெயர்ந்து சென்ற 248 இலங்கைத் தமிழர்களை காணவில்லை!

கடல் வழியாக புலம்பெயர்ந்து சென்ற 248 இலங்கைத் தமிழர்களை காணவில்லை!

3 years ago
in முக்கிய செய்திகள்

நியூசிலாந்துக்கு புகலிடம் கோரி சட்டவிரோதமாக மீன்பிடி இழுவை படகில் சென்ற 248 இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தோர் குறித்து அரசாங்கப் பதிவேட்டில் இதுவரை பதிவிடப்படவில்லை என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

இதனை நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் மைக்கேல் வுட், (Michael Wood ) குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்துக்குச் சட்டவிரோதமாக வருவோரை நான்கு முதல் 28 நாட்கள் வரை காவலில் வைக்கும் காலத்தைச் சட்டத்தை, மார்ச் 28ஆம் திகதியன்று அறிமுகப்படுத்திய நாளில், அவரது அலுவலகம் நியூசிலாந்து மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள், அவுஸ்திரேலியாவை அடைவதற்கான முயற்சிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இதன்போது 2019ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதியன்று 90 அடி நீளமுள்ள மீன்பிடி இழுவை படகு ஒன்று, இந்தியாவின் முனம்பம் பகுதி அருகே மாலியங்கராவில் இருந்து புறப்பட்டதாகவும், அதில் 248 தமிழ் புலம்பெயர்ந்தோர் அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்துக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர் எனற விடயம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர், இந்த படகு குறித்தோ அல்லது அதில் இருந்தவர்கள் குறித்தோ இதுவரை தமது நாடு அறியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த படகு தொடர்பில் விசாரணைக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட பிரபு தண்டபாணி என்பவர், குறித்த படகு நியூசிலாந்து நோக்கிச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே நியூசிலாந்து அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
Next Post
வெற்றி யாருக்கு ;நாளை மூன்றாவது போட்டி!

வெற்றி யாருக்கு ;நாளை மூன்றாவது போட்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.