கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் தொடருந்து மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (06) காலை வெள்ளவத்தை தொடருந்து கடவையில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தொடருந்துடன் மோதிய நிலையிலேயே குறித்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்த நபர் தொடர்பான விடயங்கள் இதுவரை வெளிவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், குறித்த வெளிநாட்டவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டாரா? என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








