Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாதவிடாய் காலத்தில் விடுமுறை வேண்டும்; விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி வேண்டுகோள்!

மாதவிடாய் காலத்தில் விடுமுறை வேண்டும்; விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி வேண்டுகோள்!

2 years ago
in செய்திகள்

பெண்களின் வாழ்வுக்கான சம்பளம், சேமஇலாப விடயங்கள் மற்றும் தொழில் ரீதியாக கிடைக்க வேண்டிய கௌரவம் என்பவற்றை முறையாக நடைமுறைப்படுத்த கொள்கைகளையும்திட்டங்களையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி பொன்னையா தெய்வானை கோரிக்கைவிடுத்துள்ளார். ஹட்டன் பகுதியை சேர்ந்த 25 பெருந்தோட்டங்களின் பெண்களை அங்கத்தவர்களாக கொண்டு இயங்கி வரும் இந்தவிடிவெள்ளி பெண்கள் அமைப்பு ஹட்டனில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அங்கு கருத்துரைத்த அவர், கீழ்கண்ட கோரிக்கைகளையும் முன்வைத்தார்.மலையக பெண்கள், கர்ப்பிணி தாய்மார் மற்றும் பிள்கைளின் போசக்கு தற்போது பெரும் சவாலுக்கு உட்பட்டுள்ளது. எனவே அதனை நிவர்த்திக்க அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்கள் செயற்படுத்த வேண்டும். தோட்டப்புறங்களில் இயங்கும் கோயில் அரங்காவலர் சபை மற்றும் நலன்புரி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு மிகமிக குறைவாக குறைவாகவே காணப்படுகின்றது எனவே இவற்றில் பெண்களின் பங்களிப்பைஅதிகரிப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் முன்மொழிய வேண்டும்.

வீட்டு வேலைத் தொழிலில் ஈடுப்படும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் 189வது சரத்தினை இலங்கையில் அமுல்படுத்த அரசாங்கம் உடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கருப்பையா தெய்வானை கோரிக்கை விடுத்துள்ளார்.

மாதாந்த சுகயீனத்தின் (மாதவிடாய் காலம்) போது பெண்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளத்துடனான விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழில் சுமையை அல்லது தொழில் நேரத்தை அதிகரிப்பதால் பெண்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே பெண் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ஆம் திகதி பெண்களுக்கு சம்பளத்துடன்கூடிய விடுமுறை வழங்க அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து செயற்படுத்த வேண்டும் என்பதுடன் பெருந்தோட்டதுறையில் பணிபுரியும் பெண்களை வனவிலங்கு தாக்குதல் மற்றும் இயற்கை அனர்த்தம் என்பவற்றில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவர்களைபாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடன் மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புடையசெய்திகள்

காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது
உலக செய்திகள்

காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது

May 18, 2025
பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்
செய்திகள்

பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்

May 18, 2025
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை!

May 18, 2025
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராஜினாமா
செய்திகள்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராஜினாமா

May 18, 2025
மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு
காணொளிகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு

May 18, 2025
நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
செய்திகள்

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

May 18, 2025
Next Post
ஏற்றுமதி செய்ய குரங்குகளை விட அரசியல்வாதிகளே சிறந்தவர்கள்!

ஏற்றுமதி செய்ய குரங்குகளை விட அரசியல்வாதிகளே சிறந்தவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.