Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாதவிடாய் காலத்தில் விடுமுறை வேண்டும்; விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி வேண்டுகோள்!

மாதவிடாய் காலத்தில் விடுமுறை வேண்டும்; விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி வேண்டுகோள்!

3 years ago
in செய்திகள்

பெண்களின் வாழ்வுக்கான சம்பளம், சேமஇலாப விடயங்கள் மற்றும் தொழில் ரீதியாக கிடைக்க வேண்டிய கௌரவம் என்பவற்றை முறையாக நடைமுறைப்படுத்த கொள்கைகளையும்திட்டங்களையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென விடிவெள்ளி மகளிர் அமைப்பின் தலைவி பொன்னையா தெய்வானை கோரிக்கைவிடுத்துள்ளார். ஹட்டன் பகுதியை சேர்ந்த 25 பெருந்தோட்டங்களின் பெண்களை அங்கத்தவர்களாக கொண்டு இயங்கி வரும் இந்தவிடிவெள்ளி பெண்கள் அமைப்பு ஹட்டனில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அங்கு கருத்துரைத்த அவர், கீழ்கண்ட கோரிக்கைகளையும் முன்வைத்தார்.மலையக பெண்கள், கர்ப்பிணி தாய்மார் மற்றும் பிள்கைளின் போசக்கு தற்போது பெரும் சவாலுக்கு உட்பட்டுள்ளது. எனவே அதனை நிவர்த்திக்க அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்கள் செயற்படுத்த வேண்டும். தோட்டப்புறங்களில் இயங்கும் கோயில் அரங்காவலர் சபை மற்றும் நலன்புரி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு மிகமிக குறைவாக குறைவாகவே காணப்படுகின்றது எனவே இவற்றில் பெண்களின் பங்களிப்பைஅதிகரிப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் முன்மொழிய வேண்டும்.

வீட்டு வேலைத் தொழிலில் ஈடுப்படும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் 189வது சரத்தினை இலங்கையில் அமுல்படுத்த அரசாங்கம் உடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கருப்பையா தெய்வானை கோரிக்கை விடுத்துள்ளார்.

மாதாந்த சுகயீனத்தின் (மாதவிடாய் காலம்) போது பெண்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளத்துடனான விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழில் சுமையை அல்லது தொழில் நேரத்தை அதிகரிப்பதால் பெண்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே பெண் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ஆம் திகதி பெண்களுக்கு சம்பளத்துடன்கூடிய விடுமுறை வழங்க அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து செயற்படுத்த வேண்டும் என்பதுடன் பெருந்தோட்டதுறையில் பணிபுரியும் பெண்களை வனவிலங்கு தாக்குதல் மற்றும் இயற்கை அனர்த்தம் என்பவற்றில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவர்களைபாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடன் மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
Next Post
ஏற்றுமதி செய்ய குரங்குகளை விட அரசியல்வாதிகளே சிறந்தவர்கள்!

ஏற்றுமதி செய்ய குரங்குகளை விட அரசியல்வாதிகளே சிறந்தவர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.