Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதியாக ரணில் தொடர்ந்தும் இருந்தால் நாடு முழுமையாக வளர்ச்சிபெறும்; அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

ஜனாதிபதியாக ரணில் தொடர்ந்தும் இருந்தால் நாடு முழுமையாக வளர்ச்சிபெறும்; அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

1 year ago
in செய்திகள்

நாட்டில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்புவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(13) பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுகுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலத்துக்கு காலம் அரசியல் காரணங்களுக்காக விவாதிக்கப்படும் விடயங்களுள் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி விடயமும் ஒன்று.

இதேநேரம் தமிழரது தரப்பை எடுத்தக்கொண்டால் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்ட வேளையில் அதை வரவேற்றார்கள். அதன்பின்னர் அது தேவை இல்லை என இன்னொரு தரப்பு கூறியபோதும் அதையும் வரவேற்றுள்ள நிலைமைதான் இருக்கின்றது.

ஆனால் இன்று நாடு இருக்கின்ற ஒரு சூழலில் நிறைவேற்று அதிகாரத்திற்குரிய அவசியம் இருப்பதாகவே தெரிகின்றது. காரணம் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஊடாகத்தான் நாம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என நான் நம்பகின்றேன்.

இதேநேரம் நிறைவேற்று அதிகாரம் என்பது உலகின் வேறு பல நாடுகளிலும் இருக்கின்ற ஒரு விடயம்தான். இருந்தபோதும் நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் சம தன்மை பேணப்படவேண்டும் என்ற அபிப்பிராயத்தையே நான் கொண்டுள்ளேன்.

மேலும், நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கவேண்டும் என நான் நினைக்கின்றேன். அதுமட்டுமல்லாது இதை நான் பல தடவைகள் பொதுவெளியிலும் கூறிவந்திருகின்றறேன்.

அதேநேரம், தென்னிலங்கையில் நாட்டை சீர்தூக்கிச் செல்லக்கூடிய வகையில் வேறு தலைவர்கள் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. அதாவது செயலற்றுக் கிடந்த இருந்த நாட்டை மிகக் குறுகிய காலத்துக்குள் முடியுமானவரை சீர் செய்து ஓடச் செய்துள்ளார் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

அவர் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பாரானால் நாடு முழுமையாக வளர்ச்சிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தளவில் நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வையே கொண்டுள்ளோம். குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தம் தான் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் என நாம் பல தசாப்தங்களாகக் கூறிவந்துள்ளோம்.

இதையே அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலும் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் குடாநாட்டில் அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது மிக அவசியமானதாக உள்ளது. இதற்காக ஒவ்வொரு பிரதேசங்களிலும் கிராமிய குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளேன்.

இதனூடாக சமூகவிரோத செயற்பாடுகள், போதைப்பொருள் மற்றும் கால்நடை களவு உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளை கட்டப்படுத்த முடியும் என நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்
செய்திகள்

ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

June 17, 2025
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி
செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி

June 17, 2025
வைத்தியசாலை உணவக சாப்பாட்டில் நத்தை – நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பரபரப்பு
செய்திகள்

வைத்தியசாலை உணவக சாப்பாட்டில் நத்தை – நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பரபரப்பு

June 17, 2025
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு அறிவுறுத்தல்
செய்திகள்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு அறிவுறுத்தல்

June 17, 2025
கொழும்பு ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது
செய்திகள்

கொழும்பு ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது

June 17, 2025
வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
செய்திகள்

வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

June 17, 2025
Next Post
ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.