Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க அரசு தீர்மானம்!

தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க அரசு தீர்மானம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் 180 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணியாற்றிய தற்காலிக, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களை நிரந்தரமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சரவையில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 29 ஆம் திகதி 8435 பேர் 180 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக வேலை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 18 அன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர், நிதி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் ஆகியவற்றின் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதன் செயலாளர் ஆகியோருக்கிடையில் அந்த ஊழியர்களுக்கு தொழில் பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களில் வீதிப் பராமரிப்பு, குப்பை அகற்றல், நூலகச் சேவை, அலுவலக உதவிச் செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் சேவைகளை தொடர்ந்தும் பேணுவது அவசியமானதனால் அவர்களுக்கு நிரந்தர சேவை வழங்குவது நியாயமானது என அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பொதுக் கருவூலத்தின் சுமையை குறிப்பிட்ட அளவிற்கு அதிகாரிகள் தாங்கும் திறன் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 117 உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்த 6678 ஊழியர்களுக்கு சபை நிதியிலிருந்து சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் அடிப்படையிலும், 159 குறைந்த வருமானம் பெறும் சபைகளில் 1757 ஊழியர்களுக்கு மத்திய திறைசேரியின் அடிப்படையிலும் நிரந்தர சேவை வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

ஒரே ஆண்டில் 220 கோடி டொலர்களாக உயர்ந்த ட்ரம்பின் வருமானம்!
உலக செய்திகள்

ஒரே ஆண்டில் 220 கோடி டொலர்களாக உயர்ந்த ட்ரம்பின் வருமானம்!

July 3, 2026
வெனிசுவேலாவில் 7 நாள் தேசிய துக்கம்; நிலநடுக்க பலி 2,295 ஆக உயர்வு!
உலக செய்திகள்

வெனிசுவேலாவில் 7 நாள் தேசிய துக்கம்; நிலநடுக்க பலி 2,295 ஆக உயர்வு!

July 3, 2026
ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
செய்திகள்

ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

July 3, 2026
நெல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் போராட்டம்; A9 வீதி ரம்பேவ சந்தியில் போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

நெல் விலையை உயர்த்தக் கோரி விவசாயிகள் போராட்டம்; A9 வீதி ரம்பேவ சந்தியில் போக்குவரத்து பாதிப்பு!

July 3, 2026
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 40 பேர் பலி
செய்திகள்

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 40 பேர் பலி

July 3, 2026
காணாமலாக்கப்படும் குச்சவெளி; பூஜா பூமி என்ற பெயரில் 50 வீதத்திற்கும் அதிகமான நிலம் சுவீகரிப்பு?
செய்திகள்

காணாமலாக்கப்படும் குச்சவெளி; பூஜா பூமி என்ற பெயரில் 50 வீதத்திற்கும் அதிகமான நிலம் சுவீகரிப்பு?

July 3, 2026
Next Post
புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்தால் குறைவடையப்போகும் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்!

புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்தால் குறைவடையப்போகும் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.