Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்தால் குறைவடையப்போகும் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்!

புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்தால் குறைவடையப்போகும் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்!

1 year ago
in செய்திகள்

இலங்கை மத்திய வங்கி உட்பட, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் நிதி அதிகாரங்களை குறைக்கும் சட்டமூலம் நீதி அமைச்சரால் இந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கையானது மத்திய வங்கியின் ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நீக்கி, அந்த அதிகாரம் நிதியமைச்சு மற்றும் பாராளுமன்றத்திடம் வழங்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதன்படி, மத்திய வங்கியின் ஊழியர்களுக்கு அண்மையில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு இரத்து செய்யப்படும் என்றும், ஆனால் நிதி அமைச்சுடன் கலந்தாலோசித்து நியாயமான சம்பள உயர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் கீழ், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு நிர்வாக அதிகாரங்கள் மற்றும் நிதிக் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்படும்.

அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அதிகாரங்கள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் கூறினார்.

இம்மாதம் முன்வைக்கப்படவுள்ள சட்டமூலத்தின் அடிப்படையில், அரச நிறுவனங்கள் பாராளுமன்ற நிதி அதிகாரங்களை மீறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று அவர் கூறினார்.

தற்போதுள்ள பிரச்சினைகளில் ஒன்று அரச நிறுவனங்களின் நிதி அதிகாரங்கள் குறித்து சரியான விளக்கம் இல்லை என்றும், அதன் மூலம் அவர்களில் பலர் பாராளுமன்ற அதிகாரங்களை புறக்கணிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

உத்தேச சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு செவ்வாய்கிழமை விளக்கமளிக்கப்படவுள்ளதுடன், ஏனைய அமைச்சர்களும் பாராளுமன்ற நிதி அதிகாரங்களை பேணுவது தொடர்பான யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள் நிதியைத் தக்கவைத்துக்கொள்வது, சட்டவிரோத நுண்நிதி நிறுவனங்களின் வியாபாரங்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள், குத்தகை விவகாரங்கள் மற்றும் அடகு வைத்தல் தொடர்பான பிரச்சினைகள் நிலுவையில் இருக்கும் போதே மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

3 ஆண்டுகளில் 10 இலட்சம் ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அறிவிப்பு
உலக செய்திகள்

3 ஆண்டுகளில் 10 இலட்சம் ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அறிவிப்பு

June 13, 2025
யாழில் மூன்று இலட்சம் பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் கைது
செய்திகள்

யாழில் மூன்று இலட்சம் பெறுமதியான 6 ஆடுகளை திருடிய இருவர் கைது

June 13, 2025
என்னைப் பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு அருகதை இல்லை; கோவிந்தன் கருணாகரம்
அரசியல்

என்னைப் பதவி விலகுமாறு கோருவதற்கு சாணக்கியனுக்கு அருகதை இல்லை; கோவிந்தன் கருணாகரம்

June 13, 2025
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக ப.மயூரன் மற்றும் உப தவிசாளராக இ.ஜெயகரன் தெரிவு
உலக செய்திகள்

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக ப.மயூரன் மற்றும் உப தவிசாளராக இ.ஜெயகரன் தெரிவு

June 13, 2025
மட்டு பட்டிப்பளை பிரதேச சபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சைக்குழு கைப்பற்றியது
அரசியல்

மட்டு பட்டிப்பளை பிரதேச சபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சைக்குழு கைப்பற்றியது

June 13, 2025
பொத்துவில் வரையான கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
செய்திகள்

பொத்துவில் வரையான கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

June 13, 2025
Next Post
மட்டு கல்லடியில் அழகுக்கலை நிபுணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!

மட்டு கல்லடியில் அழகுக்கலை நிபுணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.