Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண ஆளுநர் மீது கொள்ளை குற்றச்சாட்டு சுமத்தும் ஈரோஸ்!

கிழக்கு மாகாண ஆளுநர் மீது கொள்ளை குற்றச்சாட்டு சுமத்தும் ஈரோஸ்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மலையக மக்களின் குருதியினை உறுஞ்சி சுகபோகம் அனுபவித்து வந்த தொண்டமான் பரம்பரையினர் இன்று கிழக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களை சுரண்டி வாழும் நிலையுள்ளதாகவும், அதனை ஜனாதிபதி ஒருபோதும் அனுமதிக்ககூடாது எனவும் ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் நேற்று (02) மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.

செந்தில் தொண்டமான் இந்தியாவுடன் நெருங்கியவர் அவர் கிழக்கில் ஏதாவது அபிவிருத்தி செய்வார் என்று ஜனாதிபதி இவரை நியமித்தார் ஆனால் இவர் கிழக்கில் கொள்ளையடிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றார்.

இவர் வாகரையில் பாம் ஒயில் கம்பனி எனும் பெயரில் பல ஏக்கர் காணிகளை கொள்ளையிடுகின்றார்.கட்டு முறிவில் இருந்து மாங்கேணி வரை இறால் வளர்ப்பிற்காக 1100 ஹெக்டேயருக்கு மேற்பட்ட காணிகளை ஆளுனர் கொள்ளையிட முயற்சிக்கின்றார். இதனால் சுமார் 4000 மீனவ குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவது இவருக்கு தெரிவதில்லையா?

தொண்டமான் குடும்பம் தொடர்ச்சியாக மற்றவர் செய்கின்ற வேலைத்திட்டங்களுக்கு போய் போஸ் கொடுப்பதையே செய்து வருகின்றனர்.

அட்டைக்கு தங்களது இரத்தத்தை கொடுக்கும் மலையக மக்களிடம் 333 ரூபா மாத சந்தாவாக பெற்று அந்த மக்களிடம் பல கோடி பணத்தை தொண்டமான் பரம்பரையினர் கொள்ளையிடுகின்றனர். இதேபோன்று வாகரையில் கண்டல் தாவரம் நடும் போர்வையில் பல இலட்சங்களை கொள்ளையிட முயற்சிக்கின்றார்.

அரச அதிகாரிகளை அச்சுறுத்தி காணிகளை இந்த ஆளுநர் கொள்ளையிடுகின்றார் என்பது உண்மை.
1993 ஆம் ஆண்டு அமைச்சர் அவையின் அங்கிகாரத்துடன் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக இருந்து வந்திருந்த நிலையில் தற்போது அது உப பிரதேச செயலகமாக மாற்றியிருக்கின்றார்கள்.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை ஆளுநர் செந்தில் போய் சந்தித்துள்ளாரா?
மாங்கேணியில் செந்தில் தொண்டமானின் கட்சியை சார்ந்தவருக்கு பல ஏக்கர் காணி வழங்கப்படுகிறது அதை தடுக்க இங்கு எந்த அரசியல்வாதியும் இல்லை.மக்களுக்கு சேவை செய்ய வந்த நாங்கள் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும்.

வாழைச்சேனை காகித ஆலை 300 பேருடன் இயங்கி வந்த நிலையில் தற்போடு 150 பேர்தான் வேலை செய்கிறார்கள், அங்கு இருந்த இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வெளிநாட்டு பணத்தை கொண்டு வந்து இங்கு அபிவிருத்தி செய்ய சொல்லுவாரே தவிர, கிழக்கில் உள்ள காணிகளை விற்பதற்கு ஜனாதிபதி ஒரு பேதும் அனுமதித்திருக்க மாட்டார், இவர் ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தியே கிழக்கு மாகாண காணியை கொள்ளையிட்டு விற்பனை செய்கின்றார்.

ஜனாதிபதி உடன் கவனத்தில் கொண்டு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த கால வரலாற்றை நாம் எடுத்து பார்க்க வேண்டும், கோட்டா ஜனாதிபதியாக வந்ததற்கு தமிழர்களின் வாக்குகளா வழி வகுத்தது.

இன்று விலைவாசி அதிகரித்து காணப்பட்டாலும், இன்னுமொரு 5 வருடம் ரணிலுக்கே கொடுத்து பார்ப்பம் அவர் செய்யாவிடின் அவரை நாம் ஐந்த வருடத்தில் திரத்திவிடுவம்.

20 இலட்சம் வாக்கை பெறும் ஒருவரை தமிழ் வேட்பாளராக போடுவிங்களானால் அது சரி வரும் ஆனால் அப்படி நடைபெறுவதில்லையே-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
மட்டு செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

August 4, 2026
Next Post
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு எச்சரிக்கை!

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.