Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அறிவுச் சுரங்கம் பொது அறிவு போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி!

அறிவுச் சுரங்கம் பொது அறிவு போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ரமழான் மாதத்தை முன்னிட்டு Colombo Commodities நிறுவனம் வருடம் தோறும் நாடளாவிய ரீதியில் நடத்தி வரும் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி இம்முறை கொழும்பு 10 அல்ஹிதாயா கல்லூரி அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீன் மண்டபத்தில் 03.04.2024 நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற திருகோணமலை வெள்ளை மணல் அல்அஸ்ஹர் மத்திய கல்லூரி மாணவர்களுக்கும் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்குமிடையில் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில், காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர். இரண்டாம் இடத்தை திருகோணமலை வெள்ளை மணல் அல்அஸ்ஹர் மத்திய கல்லூரி மாணவர்களும் மூன்றாம் இடத்தை ஹெம்மாதகம அல்அஸ்ஹர் கல்லூரி மாணவர்களுக்கும் பெற்றுக் கொண்டனர்.

முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டிய மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பணமும் வெற்றிக் கிண்ணமும் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் வெற்றிக் கிண்ணமும் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் பதக்கமும் சான்றிதழும் Colombo Commodities நிறுவன தலைவர் டாக்டர் எம்.ஸி. பஹார்தீனால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக Colombo Commodities நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எம்.ஸி. பஹார்தீன், விஷேட அதிதிகளாக Colombo Commodities நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஹாஜியானி திருமதி ஸஹ்ரியா பஹார்தீன், பாஸித் பஹார்தீன் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக கொழும்பு- 10 அல்ஹிதாயா கல்லூரியின் அதிபர் திருமதி ஏ.எப். ஸரூனா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பிரிவின் பொறுப்பாளர் திருமதி பாத்திமா றினூஸியா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

August 9, 2026
சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்
செய்திகள்

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

August 9, 2026
பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை
செய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

August 9, 2026
Next Post
அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி!

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.