Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமண வைபவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் அதிசொகுசு கார்!

திருமண வைபவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் அதிசொகுசு கார்!

3 years ago
in செய்திகள்

பிரதமர் அலுவலகத்தின் சொகுசு காரை பழுது பார்ப்பதற்காக வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை திருமணத்திற்கு பயன்படுத்தியவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கார் பழுது பார்க்கும் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியின் கோரிக்கைக்கமைய, திருமண நிகழ்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதனை கொண்டு சென்ற வாடகை வாகன சாரதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 15 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 150000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தயான் நிரங்க என்ற நபரை அபராதம் செலுத்தும் வரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, சிறைத்தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது பிள்ளைகளின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதனால் ஒத்தி வைக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தை ஒப்படைத்த வாகன பழுதுபார்க்கும் நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் இந்த வழக்கில் முதலாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் 31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பிரதமர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட வாகனத்தை இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவது மிகவும் பாரதூரமான குற்றமாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

அப்படி ஒரு வாகனத்தை எடுத்து கொலை அல்லது வேறு ஏதேனும் குற்றத்திற்காக பயன்படுத்த சாத்தியம் இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
Next Post
திறமையுள்ளவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு; இணையத்தளம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது!

திறமையுள்ளவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு; இணையத்தளம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.