Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு- யாழிலிருந்து கடத்தப்பட்ட குழந்தைகள்; கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!

மட்டு- யாழிலிருந்து கடத்தப்பட்ட குழந்தைகள்; கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு குழந்தைகளை கடத்தி செல்லும் ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளையைச் சேர்ந்த 76 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

17 இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியதன் மூலம் அவர் மனித கடத்தல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவின் இடர் மதிப்பீட்டு பிரிவிற்கு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் இடர் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர் குறித்து மலேசிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2022 டிசம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை 17 இலங்கைக் குழந்தைகளை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களில் 13 சிறுவர்களின் தகவல்கள் குடிவரவு திணைக்கள பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழந்தைகளில் 08 பேர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மீதமுள்ள 05 பேர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து எடுக்கப்பட்டு முதலில் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர், மலேசிய குழந்தைகளாக தேவையான ஆவணங்களைத் தயாரித்து, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் கடந்த 25 ஆம் திகதி 14 வயது சிறுவன் ஒருவரை தந்தையுடன் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லவிருந்த ஒருவரை கோலாலம்பூர் விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி நேற்று காலை 09.30 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியாவின் ஏ.கே. – 047 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட அவர்கள், விமான நிலையத்தில் குடிவரவு திணைக்களத்தின் புலனாய்வு திணைக்களத்தின் இடர் மதிப்பீட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது
செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது

July 4, 2026
சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைது!
செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைது!

July 4, 2026
சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!

July 4, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!
காணொளிகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

July 4, 2026
சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!
செய்திகள்

சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!

July 4, 2026
மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
செய்திகள்

மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

July 4, 2026
Next Post
சுகாதார அமைச்சினால் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள செயலி!

சுகாதார அமைச்சினால் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள செயலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.