Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்; இந்திய ஊடகம் செய்தி!

இந்திய மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்; இந்திய ஊடகம் செய்தி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது, இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி அவர்கள் வைத்திருந்த ரூ.2 இலட்சம் மதிப்பிளான பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து தமிழ்நாடு மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், கோடியக்கரை நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி மீனவர்களின் படகுகளில் ஏறினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு ஆயுதங்களாலும் கட்டைகளாலும் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் தமிழ்நாடு மீனவர்களின் வலை, ஜிபிஎஸ் கருவி, செல்ஃபோன், டார்ச் லைட் உள்ளிட்ட ரூ.2 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளை அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கின்றனர்.

இதையடுத்து, இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு ஆயுதங்களாலும் கட்டைகளாலும் கடுமையாக தாக்கியதில் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் முருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில், அந்த மீனவரின் தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், நாகை அடுத்த ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலை மற்றும் கையில் 17 தையல்கள் போடப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது- என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு!
செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு!

July 4, 2026
நெடுந்தீவில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்; ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!
செய்திகள்

நெடுந்தீவில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்; ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

July 4, 2026
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய கெப் வண்டி மோதி 9 பௌத்த தேரர்கள் உயிரிழப்பு!
உலக செய்திகள்

தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய கெப் வண்டி மோதி 9 பௌத்த தேரர்கள் உயிரிழப்பு!

July 4, 2026
கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!
செய்திகள்

கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!

July 4, 2026
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!
செய்திகள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!

July 4, 2026
ஹொரணையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு; பிரதான சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஹொரணையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு; பிரதான சந்தேகநபர் கைது!

July 4, 2026
Next Post
நிலவின் இருண்ட பகுதிக்கு ரோபோவை அனுப்ப தயாராகும் சீனா!

நிலவின் இருண்ட பகுதிக்கு ரோபோவை அனுப்ப தயாராகும் சீனா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.