இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த சிவராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்தமாக ஆறு பேர் நேற்று(04) இரவு மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு இன்று(05) அதிகாலை இராமேஸ்வரம் அடுத்த சேரங்கோட்டையில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஆறு பேரையும் மீட்ட மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.