Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்!

கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக் கழகத்தின் முன்பாக இன்று (14) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசே மாதாந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரி, பயனுள்ள ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்து, பல்கலைக்கழக சமூகத்திற்கு பொது காப்புறுதி முறைமையை நடைமுறைப்படுத்து, ஏற்றுக் கொள்ளப்பட்ட 107வீத சம்பளம் அதிகரிப்பை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் தொடர் பணி பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புக்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வளாகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் ஏ.ஜெகராஜு கருத்து தெரிவிக்கையில்,

சம்பள மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்து பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசார் உதவி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசார ஊழியர்கள் இணைந்து மே மாதம் 2ம் திகதி தொடக்கம் இன்றுடன் 44 நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எமது கோரிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் பேசி உடன்பாட்டுக்கு வந்து அதற்கான எழுத்துமூல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால், அரசாங்கமும் இதற்குப் பொறுப்பான அரச நிறுவனங்களும் எமக்கான தீர்வை வழங்காது இழுத்தடிப்புச் செய்து வருவதையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பொறுப்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையே சாரும்.

ஆதலால், இவ்விடத்தில் தலையீடு செய்து ஊழியர்களின் கோரிக்கைளுக்கு செவிசாய்த்து பல்கலைக்கழக அனைத்து ஊழியர்களினதும் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக ஆணைக்குழு தலைவர் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

போதனைசாரா ஊழியர்களை புறந்தள்ளி பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என சிலர் சிந்திக்கின்றனர்.

ஆனால், எமது பணிபகிஷ்கரிப்பு காரணமாக பட்டமளிப்பு நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதை அவர்கள் சிந்திக்க தவறியுள்ளனர். கல்விசாரா உத்தியோகத்தர்களின் பலம் குறித்து அவர்கள் நன்கு உணரும் வகையில் சில நடவடிக்கைகளை இன்று தொடக்கம் ஆரம்பித்துள்ளோம்.

அந்த வகையில் பகிஷ்கரிப்பையும் பொருட்படுத்தாதது மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் வழங்கிவந்த சேவைகள் சிலவற்றை இன்றுமுதல் நிறுத்தியுள்ளோம்.

எமது பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்படாவில் மனிதாபிமான அடிப்படையில் தொடர்ந்தும் வழங்கப்படும் அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் முடக்கி சிலருக்கு பாடம் புகட்டவும் தயங்க மாட்டோம் என தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி

August 15, 2026
அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை
செய்திகள்

அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை

August 15, 2026
இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் இனி 100,000 அபராதம்!
செய்திகள்

இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் இனி 100,000 அபராதம்!

August 15, 2026
ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்
செய்திகள்

ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்

August 15, 2026
வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை
செய்திகள்

வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை

August 15, 2026
இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026
Next Post
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றவர் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.