அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் ( தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு , முன்னாள் தலைவர் இலங்கை தமிழரசுக்கட்சி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் – திருகோணமலை ) அன்னாருக்கு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (01) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞான முத்து சிறிநேசன், அரியநேந்திரன் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் , பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது இலங்கை தமிழரசுக்கட்சியின் கொடி அரைக்கம்பத்திற்கு பறக்க விடப்பட்டது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/IMG-20240701-WA0027-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/IMG-20240701-WA0028-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/IMG-20240701-WA0029-1024x576.jpg)