Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்; வன்முறையில் இறங்கிய கட்சியினர்!

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்; வன்முறையில் இறங்கிய கட்சியினர்!

12 months ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின் படி ஆளும் கட்சிக்கு எதிராக வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரியினர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வன்முறையில் இறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சில் அதிபர் இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்ததுமே அதிபரின் இந்த முடிவு அவருக்கே எதிராக திரும்பலாம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

இதனடிப்படையில் அதை போலவே தேர்தலில் முதல் சுற்று முடிவுகள் ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்து எதிர்பார்த்தது போல வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

அத்தோடு, மேக்ரான் கட்சிக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்துள்ள நிலையில் வலதுசாரியினரின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரியினர் பாரீஸில் வன்முறையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவதும் மற்றும் தீவைப்பு சம்பவங்களுமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வன்முறை வெடிக்க பேரணியில் ஈடுபட்டவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வலதுசாரியினர் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுக்க என்ன செய்வது என்ற யோசனையில் பிற கட்சிகள் இறங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரான்சில் முதல் கட்டத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் இரண்டு கட்சிகளுக்கிடையில்தான் இரண்டாவது கட்ட போட்டி நடைபெறும் இதனால் மேக்ரான் கட்சி போட்டியிட வாய்ப்பில்லையென தெரிவிக்கபடுகின்றது.

மேலும், சில கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை பதவி விலகச் செய்து அதன் மூலம் வலதுசாரியினரை வெற்றி பெறச் செய்யவிடாமல் தடுக்க திட்டங்கள் தீட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இஸ்ரேல் வேலைக்காக இலங்கையர்களை அனுப்பும் திட்டம் நிறுத்தம்
செய்திகள்

இஸ்ரேல் வேலைக்காக இலங்கையர்களை அனுப்பும் திட்டம் நிறுத்தம்

June 16, 2025
எனது குடும்பத்திற்கு பிரபாகரனால் நிகழாதது கூட ராஜபக்ஸர்களால் நிகழ்ந்தது; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
செய்திகள்

எனது குடும்பத்திற்கு பிரபாகரனால் நிகழாதது கூட ராஜபக்ஸர்களால் நிகழ்ந்தது; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

June 16, 2025
காதலனின் கார் வாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற வீட்டில் 20 இலட்சம் திருடிய மாணவி
உலக செய்திகள்

காதலனின் கார் வாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற வீட்டில் 20 இலட்சம் திருடிய மாணவி

June 16, 2025
மட்டக்களப்பில் வைத்தியர் கைது; இளைஞர்களுக்கு மனநலம் பாதிக்கக்கூடிய மருந்துகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு
செய்திகள்

மட்டக்களப்பில் வைத்தியர் கைது; இளைஞர்களுக்கு மனநலம் பாதிக்கக்கூடிய மருந்துகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு

June 16, 2025
ஓட்டமாவடி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
அரசியல்

ஓட்டமாவடி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது

June 16, 2025
அமெரிக்காவில் ட்ரப்புக்கு எதிராக ‘நோ கிங்ஸ்’ போராட்டம்
செய்திகள்

அமெரிக்காவில் ட்ரப்புக்கு எதிராக ‘நோ கிங்ஸ்’ போராட்டம்

June 16, 2025
Next Post
கட்டணத்தை குறைக்க முடியாது; முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

கட்டணத்தை குறைக்க முடியாது; முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.