Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கில் 300 சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம்!

மண்முனை வடக்கில் 300 சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 12 முன்பள்ளிகளில் கல்வி பயிலும் 300 சிறார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டத்தின் தெளிவூட்டல் ஆரம்ப நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வி. வாசுதேவன் அவர்களின் தலைமையில், மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (02 ) பி.ப. 3.30 மணிக்கு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி சார்பாக சிரேஸ்ட பொதுச்சுகாதரா மேற்பார்வையாளர் திருமதி கே. சிவவரதன், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு தி. மேகராஜ், தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு அலுவலர் திரு என். துஜோகாந்த், முழுமதி சகவாழ்வுச் சங்கத்தின் தலைவர் திரு எஸ். முகுந்தன், திட்ட முகாமையாளர் திரு வீ.குகதாசன், முழுமதி சகவாழ்வுச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வந்த அசாதாரண நிலைமையினைக் கடந்து வந்த மக்கள் இன்னும் அதன் சுமையை முகாமை செய்வதிலும், தமது பிள்ளைகளுக்கான போதிய போசாக்கான உணவு வழங்குவதிலும் உள்ள இடர்பாடுகளை ஓரளவு சீர் செய்யும் வகையிலும், முன்பள்ளி சிறார்கள் எதிர்நோக்கும் விருத்தி, வளர்ச்சி சவால்களை வெற்றி கொள்ளும் வகையிலும் இவ்வாறான திட்டம் முன்னெடுக்கப்படகின்றமை வரவேற்கப்படுகின்றது எனவும், அத்துடன் இயற்கைமுறை உணவுகளையும் சமூக மட்டங்களில் கிடைக்க கூடிய சத்தானதும், நம்பகமானதுமான உணவுகளை உரிய சுகாதரா முறைப்படி சமைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்பள்ளி ஆசிரியர்கள் கவனத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டும் எனவும், தொடர்ந்து திட்டத்திற்கான உணவு வழங்கலை எதிர்வரும் 08.07.2024 முதல் வழங்கி வைக்க முடியும் எனவும் அதன் திட்ட முகாமையாளர் தெரிவித்தார்.

மேலும் உள்ளூர் மட்டங்களில் சுயதொழில் ஒன்றை மேற்கொள்ளும் வருமானம் ஈட்டக்கூடிய உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் கொள்வனவைச் செய்வதன் மூலம் இயற்கை உணவுகளை பெற்றுக் கொள்ளும் அதேவேளை அவர்களையும் மேம்படுத்த முடியும் என்பதோடு சமூகத்தின் பங்களிப்பையும் இதன்பால் பெற்றுக் கொண்டு எதிர்பார்த்த இலக்கை இந்த திட்டத்தின் மூலம் அடைய முடியும் என பிரதேச செயலாளர் அவர்களும், சமூகம் தந்திருந்த அரச பிரதிநிதிகளும், திட்ட அலுவலர்களும் குறிப்பிட்டிருந்தனர், அத்தோடு சிறியதொரு நிறுவனமாக இருந்த கிராம மட்ட நிறுவனம் இவ்வாறானதொரு நிதியீட்டைப் பிரதேச மட்டத்திற்கு கொண்டுவந்ததை இட்டு பிரதேச செயலாளர், முழுமதி சகவாழ்வுச் சங்க தலைவர் திரு எஸ்.முகுந்தன் மற்றும் அணியினரை பாராட்டியதுடன் நிதி வழங்குனரான நீலன் திருச் செல்வம் நிதியத்திற்கும் தனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடையசெய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
Next Post
தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ள  தயாராக வேண்டும்; கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ள தயாராக வேண்டும்; கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.