Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது சிரார்த்த தினம்!

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது சிரார்த்த தினம்!

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று (19) மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கல்லடி – உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி மேலாளர் சுவாமி சுரஷ்சிதானந்தா ஜீ மஹராச், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா மற்றும் சிவானந்தா வித்தியாலய ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

அடிகளாரது சமாதிக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து ”வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ” பாடல் இசைக்கப்பட்டு சிரார்த்த தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு திருநீற்றுப் பூங்காவில் அமைந்துள்ள சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலையின் மாணவிகளால் சுவாமி விபுலானந்தரின் ”வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ” எனும் பாடலும் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு சுவாமியின் சிரார்த்த தின நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக வளாகத்திலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

இதன்போது சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவ வளாகத்தில் அமையப்பெற்றுள்ள சுவாமியின் திருவுருவச்சிலைக்கு நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி திருமதி.பாரதி கெனடி தலைமையில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, சிரார்த்த தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது.

அத்தோடு சிவானந்தா தேசிய பாடசாலையின் ஸ்தாபகராக சுவாமி விபுலானந்தர் திகழ்ந்ததால் இன்றைய தினம் பாடசாலையில் இடம் பெற்ற ஸ்தாபகர் தின விழாவிலும் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன், சுவாமியின் திருவுருவ படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
Next Post
நெடுந்தீவு நடுக் கடலில் பிறந்த குழந்தை!

நெடுந்தீவு நடுக் கடலில் பிறந்த குழந்தை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.