Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை நகரின் வரலாறு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களுக்குள் குழப்பம்!

கல்முனை நகரின் வரலாறு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களுக்குள் குழப்பம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரின் கல்முனை நகரின் வரலாறு தொடர்பான நூலிற்கு, அக்கட்சியின் பிரதி தலைவர் ஹரீஸ் எம்.பி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு, நூல் வெளியிட்டு விழாவையும் புறக்கணித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிகையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

கவிதை நூலுக்கும், வரலாற்றுக்கும் தொடர்புபடுத்த கூடாது என்று கருத்துக்கள் வந்தாலும் பல காவியங்கள் வரலாறாகி இருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். “அந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் உங்களின் கவிதை நூலின் தலைப்பு மாற்றப்பட வேண்டும் என கல்முனையில் தலைமை பீடமான முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் உட்பட ஏனைய ஜும்ஆ பள்ளிவாசல்கள், உலமா சபையினர், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள் உங்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அறிகிறேன்.

எனவே இந்த நூல் வெளியீட்டில் நான் கலந்து கொள்வதன் மூலம் அவர்களின் உணர்வுகளை மதிக்காத, கல்முனை மண்ணின் மாண்பில் அக்கறை கொள்ளாத ஒருவன் என்று கல்முனை மக்கள் என்னை பிழையாக எண்ணி விடுவார்கள் என தெரிவித்து ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

மரியாதைக்குரிய நிஸாம் காரியப்பர் அவர்களே என்று ஆரம்பிக்கும் அந்த கடிதத்தில், உங்களின் கவிதை நூல் வெளியீட்டுக்கான அழைப்பிதழ் என்னை வந்தடைந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் எமது ஜனநாயக பேரியக்கத்தின் பொதுச்செயலாளரான, இலங்கை சட்டத்துறை ஆளுமையான, புகழ்பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணியான, கல்முனையின் புத்திஜீவியான உங்களின் அழைப்பை மதித்து உங்கள் நிகழ்வில் கலந்துகொள்ள நான் விருப்பம் கொண்டிருந்தேன். ஆனாலும் உங்கள் “அந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் கவிதை நூலின் தலைப்பு எனக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளதை உங்களுக்கு தெரிவித்து கொள்வதுடன், அந்த தலைப்பில் நான் உடன்பாடற்றவனாக இருப்பதையும் அறியத்தருகிறேன்.

கல்முனை பிராந்தியத்தில் பல தசாப்தங்கள் கடந்து சர்ச்சையாக நீடித்துவரும் ஒரு விடயம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குகளாக நிலுவையில் நீடித்து வரும் சூழ்நிலையில் கல்முனை தாயின் பெருமையை இந்த தலைப்பு மழுங்கடித்து விடுமோ என்ற கவலை உங்களின் அழைப்பிதழை கண்ட நிமிடம் முதல் என்னுள் குடிகொண்டிருக்கிறது.

கவிதை நூலுக்கும், வரலாற்றுக்கும் தொடர்புபடுத்த கூடாது என்று கருத்துக்கள் வந்தாலும் பல காவியங்கள் வரலாறாகியிருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். “அந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் உங்களின் கவிதை நூலின் தலைப்பு மாற்றப்பட வேண்டும் என கல்முனையில் தலைமை பீடமான முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் உட்பட ஏனைய ஜும்ஆ பள்ளிவாசல்கள், உலமா சபையினர், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள் உங்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அறிகிறேன். எனவே இந்த நூல் வெளியீட்டில் நான் கலந்து கொள்வதன் மூலம் அவர்களின் உணர்வுகளை மதிக்காத, கல்முனை மண்ணின் மாண்பில் அக்கறை கொள்ளாத ஒருவன் என்று கல்முனை மக்கள் என்னை பிழையாக எண்ணி விடுவார்கள்.

உங்களின் நூல் வெளியீட்டில் கலந்து கொள்வதனூடாக கல்முனை மண்ணின் நீண்ட, நெடிய வரலாற்றையும், தொன்மையையும், புகழையும், கௌரவத்தையும் நான் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
உலக செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

August 14, 2026
மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!
செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!

August 14, 2026
ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு; நால்வர் பலி
செய்திகள்

ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு; நால்வர் பலி

August 14, 2026
போக்குவரத்து சோதனைகளில் மறைவிடங்களை தவிர்க்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

போக்குவரத்து சோதனைகளில் மறைவிடங்களை தவிர்க்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்!

August 14, 2026
கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருகிறது

August 14, 2026
சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!
செய்திகள்

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர்!

August 14, 2026
Next Post
உடன் இடமாற்றப்பட்ட 47 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்!

உடன் இடமாற்றப்பட்ட 47 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.