Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை நகரின் வரலாறு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களுக்குள் குழப்பம்!

கல்முனை நகரின் வரலாறு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்களுக்குள் குழப்பம்!

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரின் கல்முனை நகரின் வரலாறு தொடர்பான நூலிற்கு, அக்கட்சியின் பிரதி தலைவர் ஹரீஸ் எம்.பி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு, நூல் வெளியிட்டு விழாவையும் புறக்கணித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிகையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

கவிதை நூலுக்கும், வரலாற்றுக்கும் தொடர்புபடுத்த கூடாது என்று கருத்துக்கள் வந்தாலும் பல காவியங்கள் வரலாறாகி இருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். “அந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் உங்களின் கவிதை நூலின் தலைப்பு மாற்றப்பட வேண்டும் என கல்முனையில் தலைமை பீடமான முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் உட்பட ஏனைய ஜும்ஆ பள்ளிவாசல்கள், உலமா சபையினர், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள் உங்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அறிகிறேன்.

எனவே இந்த நூல் வெளியீட்டில் நான் கலந்து கொள்வதன் மூலம் அவர்களின் உணர்வுகளை மதிக்காத, கல்முனை மண்ணின் மாண்பில் அக்கறை கொள்ளாத ஒருவன் என்று கல்முனை மக்கள் என்னை பிழையாக எண்ணி விடுவார்கள் என தெரிவித்து ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

மரியாதைக்குரிய நிஸாம் காரியப்பர் அவர்களே என்று ஆரம்பிக்கும் அந்த கடிதத்தில், உங்களின் கவிதை நூல் வெளியீட்டுக்கான அழைப்பிதழ் என்னை வந்தடைந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் எமது ஜனநாயக பேரியக்கத்தின் பொதுச்செயலாளரான, இலங்கை சட்டத்துறை ஆளுமையான, புகழ்பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணியான, கல்முனையின் புத்திஜீவியான உங்களின் அழைப்பை மதித்து உங்கள் நிகழ்வில் கலந்துகொள்ள நான் விருப்பம் கொண்டிருந்தேன். ஆனாலும் உங்கள் “அந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் கவிதை நூலின் தலைப்பு எனக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளதை உங்களுக்கு தெரிவித்து கொள்வதுடன், அந்த தலைப்பில் நான் உடன்பாடற்றவனாக இருப்பதையும் அறியத்தருகிறேன்.

கல்முனை பிராந்தியத்தில் பல தசாப்தங்கள் கடந்து சர்ச்சையாக நீடித்துவரும் ஒரு விடயம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குகளாக நிலுவையில் நீடித்து வரும் சூழ்நிலையில் கல்முனை தாயின் பெருமையை இந்த தலைப்பு மழுங்கடித்து விடுமோ என்ற கவலை உங்களின் அழைப்பிதழை கண்ட நிமிடம் முதல் என்னுள் குடிகொண்டிருக்கிறது.

கவிதை நூலுக்கும், வரலாற்றுக்கும் தொடர்புபடுத்த கூடாது என்று கருத்துக்கள் வந்தாலும் பல காவியங்கள் வரலாறாகியிருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். “அந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் உங்களின் கவிதை நூலின் தலைப்பு மாற்றப்பட வேண்டும் என கல்முனையில் தலைமை பீடமான முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் உட்பட ஏனைய ஜும்ஆ பள்ளிவாசல்கள், உலமா சபையினர், வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள் உங்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அறிகிறேன். எனவே இந்த நூல் வெளியீட்டில் நான் கலந்து கொள்வதன் மூலம் அவர்களின் உணர்வுகளை மதிக்காத, கல்முனை மண்ணின் மாண்பில் அக்கறை கொள்ளாத ஒருவன் என்று கல்முனை மக்கள் என்னை பிழையாக எண்ணி விடுவார்கள்.

உங்களின் நூல் வெளியீட்டில் கலந்து கொள்வதனூடாக கல்முனை மண்ணின் நீண்ட, நெடிய வரலாற்றையும், தொன்மையையும், புகழையும், கௌரவத்தையும் நான் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படுவது போலி செய்தி; எரிசக்தி அமைச்சு
செய்திகள்

நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படுவது போலி செய்தி; எரிசக்தி அமைச்சு

June 17, 2025
தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க பரிசீலனை
செய்திகள்

தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க பரிசீலனை

June 17, 2025
நாமல் ராஜ்பகஸவின் கடந்த கால ஊழல் மோசடிகளுக்கு துணை போன சாணக்கியன்; அருண் ஹேமச்சந்திரா-VIDEO
காணொளிகள்

நாமல் ராஜ்பகஸவின் கடந்த கால ஊழல் மோசடிகளுக்கு துணை போன சாணக்கியன்; அருண் ஹேமச்சந்திரா-VIDEO

June 17, 2025
மொனராகலையில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரை மாய்ப்பு
செய்திகள்

மொனராகலையில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரை மாய்ப்பு

June 17, 2025
ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்
செய்திகள்

ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

June 17, 2025
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி
செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி

June 17, 2025
Next Post
உடன் இடமாற்றப்பட்ட 47 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்!

உடன் இடமாற்றப்பட்ட 47 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.