Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
10 வயது சிறுவனை சித்திரவதை செய்த சிறிய தாய் கைது!

10 வயது சிறுவனை சித்திரவதை செய்த சிறிய தாய் கைது!

9 months ago
in செய்திகள்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயது சிறுவனொருவன் தனது சிறிய தாயாரினால் கடந்த சில தினங்களாக கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவன் சிறிய தாயாரினால் அடிக்கப்பட்டு மோசமான சித்திரவதைகளை அனுபவித்துள்ளதாகவும் அதனை விசாரித்து அறிந்த பாடசாலை சமூகம் லிந்துலை பொலிஸ் இணையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சித்திரவதைக்கு உள்ளான சிறுவன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (23) மாற்றப்பட்டுள்ளார்.

அதேவேளை சிறுவனின் சிறிய தாயாரை வரவழைத்து பொலிஸார் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். விசாரணைகளை தொடர்ந்து அந்த பெண் லிந்துலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இன்றைய தினம் (24) நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெண் ஒரு குழந்தையின் தாய் என்பதோடு, தற்போது அவர் ஒரு கர்ப்பிணிப் பெண் எனவும் கூறப்படுகிறது.

அத்தோடு, கொடூர சித்திரவதைக்கு உள்ளான சிறுவனின் தாய் கொழும்பில் பணியாற்றி வருவதும், அவர் தனது மகனை சிறுவனின் சிறிய தாயாரிடம் பாதுகாப்புக்காக விட்டுச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சிறுவன் இவ்வருடம் நடைபெறவிருக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள, நாகசேனை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரச நிறுவனங்களில் ஊழலை குறைக்க புதிய செயற்திட்டம்!
செய்திகள்

அரச நிறுவனங்களில் ஊழலை குறைக்க புதிய செயற்திட்டம்!

May 21, 2025
ஐ.பி.எல் கிரிக்கெட் 2025 தொடரில் இன்று மும்பை – டெல்லி அணிகள் மோதல்
செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் 2025 தொடரில் இன்று மும்பை – டெல்லி அணிகள் மோதல்

May 21, 2025
இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன், கனடா, பிரான்ஸ் கூட்டாக எச்சரிக்கை
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன், கனடா, பிரான்ஸ் கூட்டாக எச்சரிக்கை

May 21, 2025
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
காணொளிகள்

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

May 21, 2025
வாழைச்சேனையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை இழுத்துச் சென்ற முதலை
செய்திகள்

வாழைச்சேனையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை இழுத்துச் சென்ற முதலை

May 21, 2025
ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்
செய்திகள்

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

May 21, 2025
Next Post
ஜனாதிபதி வேட்பாளர்களின் மாத வருமானம்!

ஜனாதிபதி வேட்பாளர்களின் மாத வருமானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.