Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கு கோட்டா காரணமில்லை; ரணில் மீது குற்றம் சுமத்தும் அனுர!

நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கு கோட்டா காரணமில்லை; ரணில் மீது குற்றம் சுமத்தும் அனுர!

2 years ago
in அரசியல், செய்திகள்

தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உருவாக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே அதற்கு பலியாகியதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலை – ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச இறையாண்மை பத்திரத்திலிருந்து இலங்கை 15.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ள நிலையில், அதில் மகிந்த ராஜபக்ச காலத்தில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே பெறப்பட்டதாகவும், மீதி 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 2015 இல் ரணில் விக்ரமசிங்கவின் நான்கு வருட நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அநுர குமார,

“ராஜபக்ச காலத்தில் பெறப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை ஏற்கனவே செலுத்தியுள்ளது.

2015 ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் பெற்ற 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை இன்னும் செலுத்த உள்ளது.

அந்த கடனைத் தீர்க்கத் தவறியதால் இலங்கையின் டொலர் கையிருப்பு குறைந்தது. எந்த சர்வதேச நிறுவனமும் எங்களுக்கு கடன்களை வழங்கவில்லை.

எமது கையிருப்புக்கள் தீர்ந்து போனதால், எனவே, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மத்திய வங்கியில் டொலர் கையிருப்பை செலவழிக்க வேண்டியிருந்தது, அந்த கையிருப்பும் தீர்ந்து போனது.

பின்னர், எங்களால் எரிபொருள் மற்றும் எரிவாயுவை வாங்க முடியவில்லை, இதனால் எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டது, இதன் விளைவாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அப்படித்தான் பொருளாதார நெருக்கடி உருவானது. ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்பட்ட நெருக்கடியில் கோட்டாபய மட்டுமே பலியாகினார்.

கோட்டாபய பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர், ரணில் செய்தது கடனைச் செலுத்துவதை நிறுத்திவிட்டு, கடனைச் செலுத்தாததால் சேமிக்கப்பட்ட டொலரில் எரிபொருள் மற்றும் எரிவாயுவைக் கொள்வனவு செய்தமை மாத்திரமே” என்றார்.

Tags: BattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
Next Post
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.