Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாரதிகள் கவனக்குறைவால் ஏற்பட்ட கோர விபத்து; கழுத்துறையில் சம்பவம்

சாரதிகள் கவனக்குறைவால் ஏற்பட்ட கோர விபத்து; கழுத்துறையில் சம்பவம்

2 years ago
in செய்திகள்

களுத்துறை, மொரகஹஹேன கோணபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் கிராமத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, லொறியுடன் இன்று பிற்பகல் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

பெத்தேவத்தை, மித்தெனிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சம்பிகா உதயங்கனி என்ற 34 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது கணவர் மற்றும் 7 வயது மகன் மற்றும் 4 வயது மகள் ஆகியோர் படுகாயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான குடும்பத்தினர் பிலியந்தலை பிரதேசத்தில் தற்காலிகமாக வசிப்பவர்கள் எனவும் பொதுத் தேர்தலுக்காக வாக்களிப்பதற்காக கிராமத்திற்கு சென்று கொண்டிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குடும்பத்தை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி கெஸ்பேவயிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​ஹொரணையிலிருந்து எதிர்திசையில் இருந்து வந்த லொறி ஒன்று முச்சக்கரவண்டி மீது மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்களை பிரதேசவாசிகள் கஹதுடுவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், பெண் உயிரிழந்துள்ளதாகவும் ஏனையவர்களுக்கு உடனடியாக அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டு களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

சாரதிகள் இருவரும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்திற்கு காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இனவாத சக்திகளுக்கு முஸ்லிம் ஊடக பிரதிநிதிகள் துணை என்ற குற்றச்சாட்டுக்கு வலுக்கும் கண்டனம்
செய்திகள்

இனவாத சக்திகளுக்கு முஸ்லிம் ஊடக பிரதிநிதிகள் துணை என்ற குற்றச்சாட்டுக்கு வலுக்கும் கண்டனம்

June 19, 2026
அமெரிக்கா–ஈரான் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில்
உலக செய்திகள்

அமெரிக்கா–ஈரான் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில்

June 19, 2026
வெறுப்புணர்வால் கனடா பேருந்தில் இஸ்லாமியப் பெண்ணைத் தாக்கியவர் கைது
உலக செய்திகள்

வெறுப்புணர்வால் கனடா பேருந்தில் இஸ்லாமியப் பெண்ணைத் தாக்கியவர் கைது

June 19, 2026
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு; யாழிலிருந்து கொழும்பு வரை இந்திய மாற்றுத்திறனாளியின் சைக்கிள் பயணம்!
செய்திகள்

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு; யாழிலிருந்து கொழும்பு வரை இந்திய மாற்றுத்திறனாளியின் சைக்கிள் பயணம்!

June 19, 2026
கதிர்காம பாத யாத்திரையில் திருட்டு; யாத்திரிகர்கள் தொடர்பில் முன்வைத்துள்ள வேண்டுகோள்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரையில் திருட்டு; யாத்திரிகர்கள் தொடர்பில் முன்வைத்துள்ள வேண்டுகோள்

June 19, 2026
25 ஆண்டுகளின் பின்னர் மீட்கப்பட்ட பாலையடிவட்டை சந்தை வளாகம்; பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானம்!
செய்திகள்

25 ஆண்டுகளின் பின்னர் மீட்கப்பட்ட பாலையடிவட்டை சந்தை வளாகம்; பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானம்!

June 19, 2026
Next Post
பொதுநூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வேட்பாளர் புகைப்படம் அகற்றப்பட்டது

பொதுநூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வேட்பாளர் புகைப்படம் அகற்றப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.