Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிகவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கான அறிவித்தல்

அதிகவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கான அறிவித்தல்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அதிகவேக நெடுஞ்சாலையில் பயணிப்போர் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்த வேண்டாம் என காவல்துறை ஊடகப் பேச்சாளாரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலை விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“ நாட்டில் மூன்று பிரதான அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளன. அவை தெற்கு அதிகவேக நெடுஞ்சாலை, வெளிச்சுற்றுவட்ட அதிகவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஆகியனவாகும்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்த மூன்று பிரதான அதிகவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் இந்த விபத்துக்கள் இடம்பெற இரண்டு பிரதான காரணங்கள் என காவல்துறையினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக கவனயீனமான முறையிலும் சாரதி அதிக களைப்புடனும் வாகனம் செலுத்துகின்றமை இந்த விபத்துக்கள் இடம்பெற காரணமாகும்.

அதிகவேக நெடுஞ்சாலையில் பயணிப்போர் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்த வேண்டாம். குறிப்பாக சாதாரண வீதிகளில் பயணிப்பதை விட நாம் அதிவேக நெடுஞ்சாலையில் அதிக வேகத்துடன் பயணிக்கிறோம்.

இதன்போது விபத்து ஏற்பட்டால் அது பாரதூரமான விபத்தாக மாறலாம். அதேபோன்று உயிர் ஆபத்து ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. எமது அவசரம் பேராபத்தை விளைவிக்கும்.

எனவே, சாரதிகள் அதி வேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நாம் கோரிக்கை விடுக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!
செய்திகள்

யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!

June 15, 2026
வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்
செய்திகள்

வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்

June 15, 2026
டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்
செய்திகள்

டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்

June 15, 2026
அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர்; உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்
செய்திகள்

அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர்; உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்

June 15, 2026
மனோரி சலே கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அஸ்கிரி மகாநாயக்க தேரர் வேண்டுகோள்!
செய்திகள்

மனோரி சலே கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அஸ்கிரி மகாநாயக்க தேரர் வேண்டுகோள்!

June 15, 2026
ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது
அரசியல்

ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது

June 15, 2026
Next Post
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியானது வர்த்தமானி; நாட்டிற்குள் கொண்டடுவரப்பட்டுள்ள டொயோட்டா வாகனங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியானது வர்த்தமானி; நாட்டிற்குள் கொண்டடுவரப்பட்டுள்ள டொயோட்டா வாகனங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.