இன்று (20) அதிகாலை, சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள சேருநுவர கந்தளாய் வீதியில் சேருநுவர இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வளைவுக்கு அருகில் நேற்று 9 மணியளவில் காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் சொகுசு பஸ் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
வடகிழக்கில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னம்பிட்டி பிரதான பாலத்தினால் வெள்ளநீர் அதிகளவாக செல்வதன் காரணமாக குறிப்பிட்ட வீதியால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் மாற்று வழியாக சேருநுவர – கந்தளாய் வீதி பயன்படுத்தப்பட்ட நிலையில் சோமபுர பகுதியில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தில் சுமார் 49 பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்து காரணமாக பஸ் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என தகவற் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.