மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் புதிதாக மாணவர்களை இணைந்து கொள்ளும் முகமாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்பம் நிகழ்வு வித்தியாலய அதிபர் நா.சிறிரங்கன் தலைமையில் நேற்று முன்தினம் (30) நடைபெற்றது.
இதன்போது பாழைய மாணவர்கள் ஒவ்வொருவரும் புதிய மாணவர்களுக்கு மலர்மாலையை அணிவித்து. வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களை பாரம்பரிய முறைப்படி பெற்றோர்களால் பல்லாக்கில் வைத்து சுமந்து பாடசாலை வளாகத்தினுள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந் நிகழ்வில் அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் அ.மகேந்திரன் அதிதியாக கலந்து கொண்டாண்டு சிறப்பித்தார்.