Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாங்கள் தமிழர்கள் அல்ல முஸ்லிம்கள்; அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரைக்கு அம்பாறையிலிருந்து வந்த கண்டனம்

நாங்கள் தமிழர்கள் அல்ல முஸ்லிம்கள்; அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரைக்கு அம்பாறையிலிருந்து வந்த கண்டனம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முஸ்லிம்கள் ஓர் இனம் இல்லை, அவர்களும் தமிழர்கள் தான் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கடந்த (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். சிங்களவர், தமிழர் எனும் இரண்டு இனங்களே இலங்கையில் உள்ளன. முஸ்லிம்கள் தமிழர்களுக்கு தான் உள்ளனர் என்று நாடாளுமன்றில் அவர் இனவாதம் பேசினார். அர்ச்சுனா இராமநாதன் எம்.பியின் இந்த கருத்து தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் எம்.பியும் கண்டனம் வெளியிடவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், விடுதலை புலிகள் ஆயுதமுனையில் கடந்த காலங்களில் செய்தவற்றை பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு செய்யலாம் என விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முனைவது பல்லினம் வாழும் சோஷலிச ஜனநாயக குடியரசு நாடான இலங்கையில் எப்போதும் நடக்காது என்பதை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும்.

தான் பாராளுமன்றம் சென்ற முதல் நாளிலிருந்து முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அர்ச்சுனா இராமநாதன் பற்றி கூறியதை மெய்ப்பிக்கும் விதமாக நடந்து வருவதை நாட்டுமக்கள் அறியாமலில்லை. தனக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்வதாக கூறிக்கொண்டு நாட்டின் இறையாண்மையையும், அரசியலமைப்பையும் மீறும் விதமாக நடப்பது அர்ச்சுனா இராமநாதன் போன்றவர்களுக்கு பொருத்தமில்லை. இந்த உரைக்காக அவர் இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி இந்த கருத்தை வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தலைவர்களும், எம்.பிக்களும் மௌனத்தை கலைத்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கடந்த (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை கண்டிக்க வேண்டும் என்பதுடன் அவரது உரையின் இனவாத கருத்தை பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை!
செய்திகள்

சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை!

July 28, 2026
ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் உயிருடன் மீட்பு; இரு இளைஞர்களின் துரித நடவடிக்கை!
செய்திகள்

ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் உயிருடன் மீட்பு; இரு இளைஞர்களின் துரித நடவடிக்கை!

July 28, 2026
ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை முன்னேறுகிறது; போர் முடிவுக்கு வாய்ப்பு என டிரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை முன்னேறுகிறது; போர் முடிவுக்கு வாய்ப்பு என டிரம்ப்!

July 28, 2026
தெவிநுவர பெரஹரா காவடி நடனத்திற்கு பலத்த பாதுகாப்பு; விசேட அதிரடிப்படையும் களமிறக்கம்!
செய்திகள்

தெவிநுவர பெரஹரா காவடி நடனத்திற்கு பலத்த பாதுகாப்பு; விசேட அதிரடிப்படையும் களமிறக்கம்!

July 28, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை; சில இடங்களில் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை; சில இடங்களில் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை

July 28, 2026
இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் இலவச விசா
செய்திகள்

இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் இலவச விசா

July 27, 2026
Next Post
தேசபந்து தென்னகோனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை

தேசபந்து தென்னகோனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.