சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று (20) வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைக்கு அமைய, ஒரு சிகரெட் விற்பனைக்கு 75% வரி விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், சிகரெட் வரி குறித்து பாராளுமன்றத்தில் மிக விரைவில் தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.