வட சீனாவில் வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் தலைநகர் பீஜிங்கிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் (112 மைல்) தொலைவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் உள்ள செங்டே நகரில் வைத்தியசாலையிலேயே நேற்று (08) இரவு 9:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தை அடுத்து வைத்தியசாலையில் இருந்தவர்கள் மேலதிக கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
வைத்தியசாலை தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.