கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (09) கிளிநொச்சி ஏ-09 வீதியின் உமையாள் புரம் பகுதியில் நடந்துள்ளது.

திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.