கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளுடன் குறித்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.