மிஹிந்தலை வல்லமோரன பிரதேசத்தில் கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (15) காலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையை விட்டு விலகி பாலம் ஒன்றின் மீது மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் வாகனத்தை செலுத்திய சாரதியும் உடன் பயணித்த மற்றொருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 37 வயதுடைய அனுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








