Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது

அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது

1 year ago
in செய்திகள்

நாட்டிலுள்ள அரசுக்கு சொந்தமான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கள் கணக்குகளுக்கு பணம் கிடைத்துள்ளதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (28) உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தேனுக சச்சிந்த என்ற நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச வங்கி தலைமையகத்தின் தொழில்நுட்ப மேலாளரால் 2022 ஆம் ஆண்டு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

வங்கியின் கம்பஹா கிளையின் பல வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற பல குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கணக்குகளில் பணம் எதுவும் வரவில்லை எள அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வங்கியின் தலைமையகத்தின் தொழில்நுட்ப மேலாளர் முறைப்பாடு செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

வங்கியின் கணினி அமைப்பை அணுகி அந்த குறுஞ்செய்திகளை அனுப்பிய நபர் குறித்து நீண்ட விசாரணை நடத்தியதாகவும், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையர் எனவும் அவர் கணினி தரவுத்தளம் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால் யாருடைய கணக்குகளிலிருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவருக்கு பிணை

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவருக்கு பிணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.