எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில் ஒரு சதுரங்கப் பலகையின் படத்தை பதிவேற்றியுள்ளார்.
இதன் மூலம் உள்ளுராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கு எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்பாடுகள் அவசியம் என்பதை அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

பல உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.
இந்த படத்தால், உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.