ஐஸ், கேரளா கஞ்சா,சிகரெட் மற்றும் பெருமறவிலான கசிப்பு போதைப்பொருட்களுடன் 42 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
57லீற்றர் கசிப்புடன் 25 பேரும், ஐஸ் போதை பொருளுடன் நால்வரும், கேரளா கஞ்சாவுடன் எட்டு பேரும் சிகரெட்டுடன் ஒருவரும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட நால்வருமாக 42 பேர் பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட கல்லடி, புதிய காத்தான்குடி, தாழங்குடா, கிரான் குளம் உட்பட பல பிரதேசங்களில் பொலிஸார் நடாத்திய திடீர் சுத்தி வளைப்பு தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



