கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டுவிட்டு அருகில் உள்ள காட்டுக்குள் குதித்து ஓடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
இதன்போது அந்த நபர் குதித்து ஓடிய பகுதியை நோக்கி பொலிஸாரும் பின்தொடர்வது காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்த காணொளியானது அந்த பகுதியில் பயணித்த வாகனமொன்றின் கண்காணிப்பு கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வாகனமானது கடந்த புதன் கிழமை இரவு கிரிபத்கொட பகுதியில் வைத்து காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.